ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையருவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜெனிப்ரியா விரைவிலேயே முழுநேர சினிமா நடிகை ஆகிவிடுவார். தற்போது அவர் சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்து வருகிறார். படம் வெளிவந்ததும் பெரிதாக பேசப்படுவாராம். தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இப்போது சினிமாவில் பிசியாக நடிக்கிறேன். அதனால் இசையருவிக்கு சின்ன பிரேக் விட்டிருக்கேன். சினிமாவில் சின்ன ஆளு பெரிய ஆளெல்லாம் கிடையாது திறமை இருந்தா ஜெயிக்கலாமுன்னு சந்தானம் சார் சொன்னார். அதான் நம்பிக்கையோட இருக்கேன். வாலு பட ஷூட்டிங்ல என்னோட பெர்மாமென்ஸ் பார்த்துட்டு ரொம்ப பாராட்டினார். ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக சிம்ரன் மேடத்தை சந்திச்சேன். நான் ஒரு படம் தயாரிக்கப்போறேன் அதுல நீ முக்கியமான கேரக்டர்ல நடிக்கப்போறேன்னு சொல்லியிருக்கார் என்கிறார் ஜெனிப்ரியா.