விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு சொன்னது நீதானே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான மும்பையில் தங்களுடைய மூன்று குழந்தைகளோடு வசித்து வரும் பிரதீப்–மோனா தம்பதிகள் தங்களின் 12 வருட வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்திக்கின்றனர். பிரதீப் தன்னுடைய தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்து சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறான். அதற்காக நகரத்தில் ஒரு வீட்டை வாங்கி தன் குடும்பத்தோடு குடியேறுகிறான். மோனா தன்னுடைய நிர்வாகத் திறமையால் வீட்டையும் குழந்தையையும் அன்புடன் கவனித்துக்கொள்கிறாள்.
இங்கு தான் சிக்கலே. குழந்தைகளிடம் மோனா எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச நேரம் பிரதீப்பை பாதிக்கிறது. குழந்தையின் மீதான மனைவியின் அதிகபட்ச கவனம் தன்னுடைய உணர்வுகளை புறக்கணிப்பதாக அவனை எண்ண வைக்கிறது. இதனால் தம்பதிகளுக்கிடையே விரிசல் ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் பிரதீப் பணி புரியும் நிறுவனத்தில் முதலாளியாக அவனது முன்னாள் காதலி அனுஷ்கா நுழைகிறாள். கல்லூரி நாட்களில் பிரதீப்பின் காதலை ஏற்க மறுத்தவள் இவள். ஆனால், அந்த அனுஷ்கா இப்போது பிரதீப்பிடம் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவனது சட்ட பூர்வமற்ற காதலை ஏற்கிறாள். இதனால் அவள் மீதான மோகத்தில் வீட்டை விட்டு வெளியேறும் பிரதீப், மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறான். இந்த சூழ்நிலையில் மோனா குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாள்? விறுவிறுப்பான கோணத்தில் செல்கிறது தொடர்.