'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் பலருக்கும் பேவரைட்டான நபராக இருந்து வருகிறார். இவரது வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் சொந்த கிராமத்தில் நிலம் வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டியிருந்த மணிமேகலை, சில மாதங்களிலேயே சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கினார். இதுபோக அவரிடம் இரண்டு சொகுசு கார்கள், ஒரு பைக் இருக்கிறது.
இந்நிலையில், சென்னையிலேயே மேலும் ஒரு புதிய அப்பார்ட்மெண்டை மணிமேகலை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு விரைவிலேயே குடியேறப்போவதாகவும் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் மணிமேகலைக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.