ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வசந்த் டி.வி.யில் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் காமெடி தர்பார் நிகழ்ச்சி, நடப்பு நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்படுவதால் நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் விளைவால் அந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தில் நேர்ந்த விபரீதங்களை நகைச்சுவையுடன் விவரித்து ஒரு தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல நில மோசடிகள் எந்தஅளவுக்கு நூதனமாக நடைபெறுகிறது? நிலத்தை வாங்கும் பொதுமக்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கும் வகையிலும் ஒரு தொடர் அமைந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகும் இத்தொடரை ஜெயமணி இயக்குகிறார். இதில் சுருளிமனோகர், காத்தாடி ராமமூர்த்தி, முல்லை, தனசேகர், சுப்புராஜ், மகிமா, சபானா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.