Advertisement

சிறப்புச்செய்திகள்

வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்!

25 ஏப், 2013 - 11:25 IST
எழுத்தின் அளவு:

கலாசாரத்தை சீரழிப்பதாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆகியோர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
விஜய் "டிவி சேனலில்," நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி சிறப்பு விருந்தினர்களாக, கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பாளரான, நடிகர் பிரகாஷ்ராஜ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், "உங்களுக்கு கமலை பிடிக்குமா? என, கேட்கிறார். எல்லாரும் பிடிக்கும் என்கின்றனர். ஒரு நடுத்தர வயது பெண், "எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். அதற்கு பிரகாஷ்ராஜ், "உங்களுக்கு, கமலிடம் நிறைவேறாத ஆசை, என்ன? என, கேட்கிறார்.

அந்த பெண், "கமலை நான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார். "இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, "என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன் என்கிறார். இந்த நிகழ்ச்சியில், "நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு? என, பிரகாஷ் ராஜ் கேட்க, "நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்று கமல் கூறியுள்ளார்.

இதுதவிர, நடிகை திவ்யதர்ஷினி என்பவரும், கமலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை, குடும்பத்துடன் பார்க்கும் பொது அறிவு நிகழ்ச்சியில், இது போன்ற அடுத்தவர் மனைவி, நடிகரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதும், நடிகர், நடிகை இருவரும், கணவன் மனைவியாக இல்லாமல், "உடலுறவில் ஈடுபடுவோம் என்பதும், நம் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிப்பதுடன், பாலியல் வன்கொடுமைகளை தூண்டுவதாக உள்ளது. நிகழ்ச்சியை ஒளிபரப்பிய, விஜய் "டிவி நிர்வாகம், நடிகர்கள் கமல், பிரகாஷ்ராஜ், நடிகை கவுதமி மற்றும் நடுத்தர வயது பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
கருத்துகள் (69) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (69)

palaniappan - madurai,இந்தியா
15 அக், 2013 - 18:11 Report Abuse
palaniappan உலக நாயகன்ன சும்மாவா எல்லா விஷயத்திலும் உலகதரமா சிந்திகிறாரு
Rate this:
bretneydew - kl,மலேஷியா
04 ஜூலை, 2013 - 11:39 Report Abuse
bretneydew கலாச்சாரத்த கொன்னு பொதசாச்சு செத்துபோச்சியா விடுங்க
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
27 ஜூன், 2013 - 15:37 Report Abuse
Arumugam இந்த கூத்தாடியை உலகநாயகன் என்று கூச்சமில்லாமல் சொன்னவருக்கும் எழுதுபவர்களுக்கும் சூடு சொரணை இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள்,வெளி உலகமறியா கிணற்று தவளைகள். கருப்பர்கள், அரேபியர்கள்,வெள்ளைக்காரர்கள் இந்த ஆளை இப்படி அழைப்பதை கேள்விப்பட்டால் காரி முழிவார்கள்.
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
22 ஜூன், 2013 - 16:31 Report Abuse
Arumugam இந்தியாவில் சினிமாத்தொழிலை அறவே ஊத்தி மூடிவிட்டு, இவர்களை வேறு தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தினால்தான் நம் நாடு உருப்படும், இவர்களும் திருந்துவார்கள். இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் சினிமா ஒரு நல்ல பொழுதுபோக்கு அல்ல. நிறைய புத்தகங்கள் படிக்கலாம், கால் பந்து, கை பந்து போன்றவை விளையாடலாம். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. வயதானவர்கள் வேண்டுமானால் பொழுது போக்குவதற்காக ஏற்கனவே வந்த பழையப்படங்களை பார்க்கலாம், டிவியில்.. நடிகர்களை கடவுளாகவும், தலைவர்களாகவும் நினைக்கும் ஏமாளிகளும், கோமாளிகளும் இந்தியாவில் மட்டும்தான் உண்டு என்பது கசப்பான உண்மை.
Rate this:
Sivakumar - Permbalur,இந்தியா
20 மே, 2013 - 21:38 Report Abuse
Sivakumar சரியான மான கேடு ,,,,,,,,,,,,,என்ன சொல்ல ,,,,,,,,,,,
Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in