'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பார்த்த ஞாபகம் இல்லையோ தொடரில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை குஷ்புவின் கதாபாத்திரம் மேலும் மெருகேற்றப்பட்டு புதுப்பொலிவுடன் தோன்றவுள்ளார். பல்வேறு திருப்பங்களுடன் வரவிருக்கும் இத்தொடர் 150 எபிசோடுகளை தாண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு போதைஊசிக்காக தன் சொந்த மனைவி ஓவியாவையே கொலை செய்ய வருகிறான் கார்த்திக். தன்னை கொலை செய்ய வந்தது தன் கணவன்தான் என்று தெரிந்த ஓவியா அதிர்ச்சியடைகிறாள். தன் கணவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதை தெரிந்து கொள்கிற அவள், அதனால்தான் தன்னை கொலை செய்ய வந்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்கிறாள். கணவன் தனது எதிரி ரகுநாத்தின் கைப்பாவையாக இயங்கி வருகிறான் என்பதை அறிந்து தன் கணவனை ரகுநாத்திடமிருந்து மீட்க முயற்சிக்கிறாள். ரகுநாத்துடனான அவள் போராட்டம் வென்றதா என்பது தொடரும் விறுவிறு காட்சிகள், என்று பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.




