விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் ஆர்ஜே செந்தில் இரட்டை வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ரக்ஷா, ராஷ்மி ஆகியோரும் நடித்து வந்தனர். கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட சிக்கலால் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டு, சீசன் 2-வாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்தில் - ரச்சிதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் காமெடி ட்ராக்கில் கலக்கி வந்த ராஜூ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக முதல் சீசனில் பட்டையை கிளப்பிய சிவகாந்தையே இந்த சீசனிலும் நடிக்க வைக்க சீரியல் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆர்ஜே சிவகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் 'ஐ எம் பேக்' என பதிவிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தான் மீண்டும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார். முதல் சீசனில் இவரது காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியருந்ததால் ரசிகர்களும் சிவகாந்தின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.