ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக் கண்டேன், அயன், கோ படங்களின் கதை வசனகர்த்தாக்களாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சுபா. கதை விவாதம், திரைக்கதை அமைப்பு என அனைத்திலும் கே.வி.ஆனந்த்க்கு உதவி வந்தார்கள். ஆனால் இவர்கள் இணைந்து பணியாற்றிய மாற்றான் படம் தோல்வி அடைந்து விட்டது. இதற்கு எழுத்தாளர்களின் தவறான ஆலோசனைதான் என்று கே.வி.ஆனந்த் கருதுகிறாராம். இதனால் ஏழுத்தாளர் சுபாவை தன் குழுவிலிருந்து விலக்கி விட்டாராம். தற்போது கே.வி.ஆனந்த்க்காக ரஜினிக்காக ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறாராம். இதன் கதை விவாதத்திலும், ஆலோசனையிலும் சுபா இல்லை. அவர்களுக்கு பதிலாக அந்த டீமில் இப்போது பட்டுக்கோட்டை பிரபாகர் காணப்படுகிறார். "ரஜினிக்காக தயாராகி வரும் ஸ்கிரிப்ட் சூப்பர் போலீஸ் ஆக்ஷன் ஸ்டோரி. உலகையே உலுக்கும் ஒரு க்ரைம் சென்னையில் நடக்கிறது. அதை கண்டுபிடிக்க வரும் இண்டர்போல் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடிக்கிறார். அதனால்தான் க்ரைம் நாவல்களுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டை பிரபாகரை இயக்குனர் விவாதத்திற்கு அழைத்துள்ளார். மற்றபடி சுபா எங்கள் அணியில்தான் இருக்கிறார்" என்கிறார்கள். கே.வி.ஆனந்தின் நண்பர்கள்.