ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்டதற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட நீதிமன்றம் வரை சென்றார்கள். பின்னர் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் சந்தித்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்கள் என தகவல் வெளியானது.
அதற்குள் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். 'இந்தியன் 2' படத்தையும் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று அவர் சொன்னதை பாலோ செய்யவில்லை எனத் தெரிகிறது.
எஞ்சியுள்ள காட்சிகளைப் படமாக்க ஷங்கர் தரப்பில் ஒரு பட்ஜெட்டைச் சொன்னார்களாம். அந்த பட்ஜெட், எவ்வளவு நாட்களில் படமாக்கம் என ஒரு அக்ரிமென்டில் எழுதி கையெழுத்துப் போட வேண்டும் என லைக்கா தரப்பில் ஷங்கரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இந்தக் காரணத்தால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
இப்போதுள்ள சூழ்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்பது சந்தேகமே என்கிறது கோலிவுட் தரப்பு. ஷங்கர் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்றால் லைக்கா தரப்பில் படத்தை 'டிராப்' செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.