விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
"12 பி, இயற்கை உள்ளிட்ட படங்களுக்கு பின், போதிய வாய்ப்பு இல்லாமல் இருந்த ஷாம், சிறிய இடைவெளிக்கு பின், தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், மும்பையில் நடந்தது. படப்பிடிப்பில், கையடக்க நவீன கேமராவுடன், ஒளிப்பதிவாளர் பின் தொடர, அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே, பரதேசி கோலத்தில், ஷாம் நடந்து செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து, அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை காவலர்கள், அவரை பயங்கரவாதி என நினைத்து, ரகசியமாக பின் தொடர்ந்து சென்று பிடித்து, தனி அறையில் கட்டிப்போட்டு அடைத்துள்ளனர்.இதை பார்த்து அதிர்ந்த ஒளிப்பதிவாளர், மருத்துவமனை காவலர்களிடம் உண்மையை விளக்கியும், அவர்கள் நம்பவில்லை. இறுதியாக, தனக்கு நெருக்கமான அதிகாரியிடம், ஷாம் விஷயத்தை கொண்டு செல்ல, அந்த அதிகாரி விளக்கிய பின், மருத்துவமனையில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.