மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் நேற்று (22ம்தேதி) இரவு காலமானார். அவருக்கு வயது 84. சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி கடந்த 6 மாதங்களாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மறைந்த எஸ்.வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகளும், ஒரு பேரனும், ஒரு பேத்தியும் உள்ளனர். இவர் 1938ம் ஆண்டு 1938ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் தயாரித்த சேவா சதனம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சக்கர வர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, குணா உள்ளிட்ட 200க்கும் அதிகமான தமிழ் படங்களிலும், 200க்கும் அதிகமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர், திருடாதே, கந்தன் கருணை, சினிமா பைத்தியம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி. கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், நல்ல பாடகியாகவும் திகழ்ந்து வந்தார்.
மறைந்த எஸ்.வரலட்சுமியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.