ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் தலைவி. ஏ.எல். விஜய் இயக்க, ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்காக சென்னை வந்திருந்தார் கங்கனா. சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் தொடர்ந்து எம்ஜிஆர்., கருணாநிதி நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.
தலைவி பிரஸ்மீட்டில் கங்கனா பேசியதாவது : கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியாகும் படம் இது. இன்னும் நோய் தொற்று குறையவில்லை. இருந்தபோதிலும் நாம் நமது வேலைகளை துவங்க வேண்டி உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைய ஏற்ற, இறக்கங்கள். ஏப்., 23ல் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தோம். கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டது. இந்த முறை தியேட்டருக்கு வருகிறோம்.
நிறைய தடைகளை கடந்து இந்த படம் ரிலீஸை நெருங்கிவிட்டது. நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஒரு குழந்தைபோல் இந்த படத்தை காண, குறிப்பாக தமிழ் பதிப்பை காண ஆவலாய் உள்ளேன். இதுமாதிரியான கதைகளை சித்தரிக்க சரியான நடிகர்களை தேர்வு செய்த இயக்குனர் விஜய்க்கு நன்றி. அரவிந்த்சாமி, சமுத்திரகனி, தம்பி ராமையா, மதுபாலா உள்ளிட்டவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.