ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"ஓம் சாந்தி ஓம், சாந்தினி சவுக் டூ சீனா, காக்டெயில் என, பாலிவுட் பியூட்டி, தீபிகாவின் திரையுலக வெற்றிப் பயணம் தொடர்கிறது. "சென்னை எக்ஸ்பிரஸ், ரேஸ்-3, கோச்சடையான் என, இப்போதும், காலில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் தீபீகாவை நிறுத்தி,"கவர்ச்சியான வேடங்களிலேயே, அதிகம் நடிப்பதாக, உங்கள் மீது, குற்றச்சாட்டு உள்ளதே என, கேட்டால், தன் அழகான விழிகளை, அங்குமிங்கும் உருட்டி, முறைக்கிறார். "இப்படி வேறு, பீதியை கிளப்புகிறார்களா. ஏற்கனவே, எனக்கு சரியாக இந்தி பேசத் தெரியவில்லை என, புகார் கூறினர். நான், தென் மாநிலத்திலிருந்து வந்தவள். இந்தியில் சரளமாக பேசுவதற்கு, சிறிது காலம் பிடித்தது. இது ஒரு குற்றமா என, கேள்வி எழுப்பியவர், "கவர்ச்சியாக நடிப்பதாக என் மீது புகார் கூறுவோரிடம், ஒன்றை கூற விரும்புகிறேன். கவர்ச்சியாக நடிப்பது, அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. சீரியசான கேரக்டர்களில் கூட, கண்களில், கிளிசரினை தேய்த்துக் கொண்டு, மாய்ந்து, மாய்ந்து அழலாம். ஆனால், கவர்ச்சியாக நடிப்பது, ரொம்ப கஷ்டமான காரியம். அதையெல்லாம், அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என, பொருமித் தீர்த்தார்.