ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் என்னை தெரியுமா உள்பட சில படங்களில் நடித்தவர் சினேகா உல்லால், பிரபல தெலுங்கு நடிகையான இவர், விலங்குகள், பறவைகள் மீது அதிக பிரியம் கொண்டவர். அதன்காரணமாக, எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் விலங்குகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தால் உடனே ப்ளூ கிராசுக்கு போன் போட்டு புடிச்சுக்கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு டேஞ்சனரானவர். அப்படிப்பட்டவர் தனது கண்ணெதிரே அப்படியொரு கொடுமை நடந்து விட்டால் பார்த்து விட்டு சும்மா இருப்பாரா என்ன?
தற்போது, தெலுங்கில் அனில் சன்கரா என்பவர் இயக்கும் 3டி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சினேகா உல்லால். இதன் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கிளிகள் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாம். இதனால் ஆவேசமாகி விட்டாராம் நடிகை. விலங்குகளை துன்புறுத்தி படமெடுப்பதே தவறு. அப்படியிருக்க அவற்றை கொன்று விட்டீர்களே. இதற்கு நீங்கள்தானே காரணம் என்று பட டைரக்டர் அனில் சன்கரா மீது பாய்ந்து விட்டாராம் சினேகா. அதோடு விடவில்லையாம். இந்த விசயத்தை ப்ளு கிராசுக்கு தகவல் கொடுத்து அவர் மீது மிருக வதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்து விட்டாராம். இதையடுத்து அப்படத்தின் டோட்டல் யூனிட்டே சினேகா உல்லால் மீது கோபத்தில் உள்ளதாம்.