ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன். இவர் தானே தயாரிக்கும் அகிலன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி வித்யா என்ற நடிகை. இவர் தவிர இந்தப் படத்தில் ராஜ்கபூர், சிங்கம்புலி, கஞ்சா கருப்பு நடிக்கிறார்கள். இந்த படம் தொடர்பாக நடந்த பிரஸ் மீட்டில் டாக்டர் சரவணன் பேசியதாவது: நான் ஆசைப்பட்டது மாதிரி டாக்டராகி ஒரு மருத்துவமனை கட்டி நோயாளிகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்து வருகிறேன். என்னால் முடிந்த சில சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். ஆடுகளம் படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த மேரியம்மாதான் டாக்டர் நீங்க அழகா இருக்கீங்க. சினிமால நடிச்சா பெரிய ஆளா வருவீங்கன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வச்சாங்க. ஆனாலும் என் மருத்துவ சேவை பாதிக்காம தினமும் பேஷண்டை கவனித்துவிட்டு மாலை நேரங்களில்தான் நடித்தேன். பத்து நாளில் என் போர்ஷனை எடுத்து விட்டார்கள். பத்து நாளில் சண்டை போட்டு, டூயட்டும் பாடி விட்டேன்.
சில பேர் இது டாக்டருக்கு தேவையில்லாத வேலை என்று கூறினார்கள். நான் அவர்களை கேட்கிறேன். டாக்டரும் மனுஷன்தானே அவனுக்கு ஆசாபாசங்கள், ஆசைகள் இருக்க கூடாதா? டாக்டர்கள் என்றால் வைத்தியம் மட்டும்தான் செய்ய வேண்டுமா? வேறு துறையில் ஈடுபடக்கூடாதா. எப்போதும் நோயாளிகளுடன்தான் இருக்க வேண்டுமா, தொழில்மன அழுத்தத்திலிருந்து விடுபட இதுபோன்று கலையில் ஈடுபடுவது தவறா?. நான் பணத்துக்காக படம் எடுக்கவில்லை. சினிமா மூலம் மக்களுக்கு நாலு நல்ல கருத்தைச் சொல்லத்தான் படம் எடுக்கிறேன். இனி வருடத்துக்கு ஒரு படம் எடுப்பேன். நடிப்பேன். என்றார்.
அப்படி போடுங்க டாக்டர்...!!