ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தை இயக்கிய இராசுமதுரவன் அடுத்து லாரன்சை வைத்து படம் இயக்கப்போவதாக சொன்னார். ஆனால் இவர் கால்சீட் கேட்டு சென்றபோது, தெலுங்கு ரெபெல் படத்தை இயக்கி வந்த லாரன்ஸ், அடுத்து தான் தமிழில் முனி பாகம் 3 படமான கங்காவை இயக்கி நடிக்கப்போவதாக சொல்லி நடிக்க மறுத்து விட்டார். இதனால் தற்போது காளையரும் கன்னியரும் என்ற படத்தை யுவன், ஜானி போன்ற இளவட்ட நடிகர்களை வைத்து இயக்கி வருகிறார்.
இதற்காக அவர் தேனி சென்று படப்பிடிப்பை தொடங்கிய சில நாட்களிலேயே அப்படத்தில் ஜானிக்கு ஜோடியாக நடிக்கயிருந்த வழக்கு எண் மனீஷா யாதவ் இந்த படம் வேண்டவே வேண்டாம் என்று ஓட்டம் பிடித்தார். இதனால் சல்லடை போட்டு கதாநாயகி தேடிய அவர் பேராண்மை படத்தில் 5 நடிகைகளில் ஒருவராக நடித்த லியா ஸ்ரீ-யை புக் பண்ணினார். ஆனால் அதைத்தொடர்ந்து இப்போது யுவனுக்கு ஜோடியாக நடித்து வந்த ராட்டினம் ஸ்வாதியும் படத்தில் தனக்கு எந்தவித முக்கியத்துவம் இல்லாததாக சொல்லிக்கொண்டு தொடர்ந்து நடிக்க மறுத்து தேனியிலிருந்து சென்னைக்கு வந்து விட்டாராம். இதனால் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடர முடியாமல் தவித்து போயிருக்கும் இராசுமதுரவன் மீண்டும் இன்னொரு கதாநாயகி தேடும் வேட்டையை முடுக்கி விட்டிருக்கிறார்.