ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசந்த் இயக்கும் மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் தாமிரபரணி பானு. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி, தாமிரபரணி வெற்றி பெற்றும் அடுத்து ஒரு நல்ல படம் கிடைக்காதது எனது துரதிர்ஷ்டம். மலையாளப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும். கொஞ்சம் குடும்ப பிரச்னைகள் இருந்ததாலும் தமிழ்நாட்டு பக்கம் வரமுடியவில்லை. இனி தமிழில் நடித்தால் பெரிய படத்தில், பெரிய இயக்குனர் படத்தில்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
மூன்று பேர் மூன்று காதல் வாய்ப்பு வந்ததும் ஒப்புக் கொண்டேன். மூன்று ஹீரோயின்கள் என்றாலும் வசந்த் பெரிய இயக்குனர் என்பதால் அவரை நம்பி ஒப்புக் கொண்டேன். பலர் வசந்த் அடிக்கடி டென்ஷன் ஆவார். திட்டுவார் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். எப்படி இருந்தாலும் சமாளித்துக் கொள்வோம் என்று நினைத்து நடித்தேன். அவர்கள் சொன்ன மாதிரியே நடந்தது. முதல் நாள் போட்டோ ஷூட்டில் கதறி அழுதுவிட்டேன். கதையில் நான் நாகர்கோவில் பொண்ணு. அதற்கேற்ற மாதிரி பாவாடை, தாவணி, சேலை அணிவித்து படம் எடுத்தபோது எனக்கு வசந்த் சார் சொல்லிக்கொடுத்த மேனரிசம் சரியாக வரவில்லை. சரமாரியாக திட்டிவிட்டார். கடைசியில் "பானு நீ நல்லா நடிக்கிற இன்னும் பெட்டரா பண்ணினா உன் ஃபியூச்சர் நல்லா இருக்கும்" என்று சொன்னார். அந்த அக்கறை பிடித்திருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பில் ரொம்ப கவனமாக நடித்து அவரின் பாராட்டைப் பெற்றேன். இப்போது என்னை நாகர்கோவில் பெண்ணாக திரையில் பார்க்கும்போது நான் வாங்கிய திட்டும், அழுத அழுகையும் ஒரு விஷயமே இல்லை என்று தோன்றுகிறது. வசந்த் சாரிடம் 3 மாதங்கள் நான் கற்ற பாடம் என் எதிர்காலத்துக்கு உதவும்.
மோதிரக் கையால குட்டுப்பட்டாலும் வலிக்கத்தானே செய்யும்!!