கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மழைப் பாடல்கள் என்பது அவ்வப்போது இடம் பெறும். குறிப்பாக கதாநாயகிகளை கிளாமராகக் காட்ட அந்த மழைப் பாடல்களைப் படமாக்குவார்கள். ஒரு காலத்தில் அப்படிப்பட்ட பாடல்கள் அடிக்கடி வருவதுண்டு, இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது. மழைப் பாடல்கள் இல்லை என்றாலும் மழை காட்சிகள் பல படங்களில் இடம் பெறத்தான் செய்கிறது.
தமிழில் 'பூமி, ஈஸ்வரன்' படங்களில் நடித்த நிதி அகர்வால் மழைப் பாடல்களில் நடிப்பது பிடிக்கவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “மழைப் பாடல்களில் நடிப்பது சுலபமானதல்ல. முழுவதுமாக நனைந்து, பின்னர் நம்மை உலர வைத்து, மீண்டும் நனைவது மிகவும் கடினமானது. மேலும், தண்ணீர் பொழியும் போது நம் கண்களைத் திறந்து கொண்டு நடிப்பது சவாலா ஒன்று. அதனால், மழைப் பாடல்களில், நடிப்பது பற்றி எண்ணம் தற்போது இல்லை,” என்கிறார்.
நிதி அகர்வால் தற்போது உதய்நிதி ஜோடியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.