ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், சோசியல் மீடியாவில் பல அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறார். இந்நிலையில் சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நேற்று நீதிபதி கண்டனம் தெரிவித்தது, அபராதம் விதித்தது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
அதில், நடிகர் விஜய் ரியல் ஹீரோதான். அவர் பல ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கிறார். பிரதமர், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்திருக்கிறார். பல மாணவர்களை படிக்க வைக்கிறார். ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறார். அதனால் இதையெல்லாம் மறந்து விட்டு நீதிமன்றத்தில் நடந்ததையே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் செய்து வரும் நல்ல விசயங்களை மறக்கக் கூடாது என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் காயத்ரிரகுராம்.