ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். பிற்காலத்தில் கொலை வழக்கில் சிறைக்கு சென்று, சொந்த படம் தயாரித்து பணத்தை இழந்து மறைந்தார். அவரது சமாதி திருச்சியில் உள்ளது. அவரது குடும்பத்தினரும் திருச்சியில் வாழ்ந்து வருகிறார்கள்.
தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் என்பவர் முதல்வரின் தனி பிரிவில் மனு கொடுத்தார். அந்த மனுவில் "எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் 2வது மனைவி ராஜம்மாள். அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான். எனக்கு அண்ணன், தம்பி, தங்கை உள்ளனர். நாங்கள் 4 பேரும் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார்.
நான் புகைப்பட கலைஞராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். தற்போது கொரோனா காலத்தில் தொழில் முடங்கி மிகவும் வறுமையில் வாடுகிறேன். செக்யூரிட்டி வேலை செய்கிறேன். சாப்பிட வழியில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு மற்றும் ரூபாய் 5 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். அதன்படி இன்று தலைமை செயலகத்தில் உதவி தொகை மற்றும் அரசு குடியிருப்புக்கான வீட்டு சாவியை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம்.