ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பேராண்மை படத்தில் அறிமுகமானவர் வர்ஷா. அதன் பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்தவர் தற்போது நீர்ப்பறவை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். "நான்தான் நீர்ப்பறவையின் ஹீரோயினாக நடிக்க வேண்டியது கடைசி நேரத்தில் கேரக்டரை மாற்றி விட்டார்கள்" என்று கூறுகிறார் வர்ஷா.
அவர் கூறியிருப்பதாவது: ஒரு பட விழாவில் இயக்குனர் சீனு ராமசாமியை சந்தித்தேன். என் படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார் சரி என்று சொன்னேன். அவர் அலுவலகம் சென்றேன். கதையைச் சொன்னார். அதன் பிறகு நாகர்கோவில் கிறிஸ்தவ பெண்ணாக மேக்அப் போட்டு போட்டோவெல்லாம் எடுத்தார்கள். சரி நான்தான் ஹீரோயின் என்று சந்தோஷமாக இருந்தேன். அதன் பிறகு பிந்து மாதவிதான் அந்த கேரக்டரில் நடிக்கப்போவதாக சொன்னார்கள். நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன்பிறகு அவரும் இல்லை, சுனைனா என்றார்கள். என்னை அழைத்து நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க மாட்டாய் படத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி கேரக்டர் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாய் என்றார்கள். நானும் ஒப்புக் கொண்டேன். ஹீரோயின் வாய்ப்புத் தராமல் நீர்ப்பறவை ஏமாற்றினாலும் நந்திதாதாசுடன் நடித்தேனே அந்த பெருமை போதும். தற்போது அமைதிப்படை 2ம் பாகத்தில் நடித்து வருகிறேன். அரசியல்வாதிகளை பழிவாங்கும் நெகட்டிவ் கேரக்டர், பனி விழும் மலர்வனம் என்ற படத்திலும் நடித்து வருகிறேன். நானும் முன்னணி நடிகையாகி சாதிப்பேன் என்றார்.