ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோ படத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்தால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை கார்த்திகா. பிரபல சீனியர் நடிகை ராதாவின் மகளான இவருக்கு, பின் வந்த நாட்களில் தனது தாயின் புகழ் எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. அன்னக்கொடி, புறம்போக்கு ஆகிய படங்களும் இவரை ஏமாற்றின. அருண் விஜய்யுடன் சில வருடங்களுக்கு முன் நடித்த வா டீல் படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது.
தவிர இந்தியில் அர்னாப் என்கிற சீரியலிலும் நடித்தார் கார்த்திகா. கடந்த இரண்டு வருடங்களாகவே பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத கார்த்திகா, இனியும் சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்க விரும்பவில்லையாம். அதனால் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தான் தற்போது பொறுப்பு வகித்து வரும் யுடிஎஸ் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பணியையே தொடர முடிவு செய்துள்ளாராம் கார்த்திகா. மேலும் இனி சினிமா பக்கமே திரும்புவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளாராம் கார்த்திகா,.