ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் 10வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது. இதில் 57 நாடுகளைச் சேர்ந்த 160 படங்கள் திரையிடப்படுகிறது. உட்லன்ஸ், ஐநாக்ஸ், சத்யம், ராணி சீதை ஹால் மற்றும் காசினோ திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகிறது.
இதில் ஆஸ்கார் மற்றும் கேன்ஸ் விருதுகள் பெற்ற பல படங்கள் திரையிடப்படுகிறது. இந்த ஆண்டின் புதுமையாக கொலம்பியா, ஆஸ்திரேலியா, ஹங்கேரி மற்றும் துருக்கி நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அதோடு இந்திய சினிமாவின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் சந்திரலேகா(தமிழ்), மேக சந்தோஷம்(தெலுங்கு), பதர் பாஞ்சாலி(பெங்காலி), கைடு(இந்தி), வீப்பா(கன்னடம்), வதுகார அல்லது தம்பு(மலையாளம்) ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
13ம் தேதி துவக்கவிழா ஏ.ஆர்.ரகுமான் இசை பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. இதில் சர்வதேச திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். 30ம் தேதி நிறைவு விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். படவிழாவுக்கான அறிமுக நிகழ்ச்சியில் இன்டோ சினி அப்ரியேஷன் தலைவர் எஸ்.கண்ணன், பொதுச் செயலாளர் தங்கராஜ், படவிழா தலைவர் சுஹாசினி, துணை தலைவர் ராமகிருஷ்ணன், நடிகர் மோகன், ரோகினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.