ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படம் கடல். இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவும், கார்த்திக்கும் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் அவர்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் அய்யர் வீட்டு பையனாகவும், ராதா கிறிஸ்தவ பெண்ணாகவும் நடித்தார். இதில் கவுதம் கிறிஸ்தவ பையனாகவும், துளசி அய்யர் வீட்டு பெண்ணாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் கடற்புரம்தான் கதைக் களம். இதிலும் கடற்புரந்தான் கதை களம். ஆனால் அது கரையில் நடந்த கதை. இது கடலில் நடக்கும் கதை. நடுக்கடலில் ஒரு கிறிஸ்தவ பையனும், அய்யர் வீட்டு பெண்ணும் கிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் ஊரில் இரு ஜாதியினரும் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கரைக்குச் சென்றால் அந்த ஊர் இருவரையுமே கருணை கொலை செய்து விடும். நடுக்கடலில் தவிக்கும் அவர்களுக்குள் காதலும் வந்து விடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் நாயகனும், நாயகியும் தங்கள் மத அடையாளங்களை கழற்றி எறிவது மாதிரியான கிளைமாக்ஸ். இதில் அதற்கு நேர் எதிர்மாறான கிளைமாக்ஸ் என்கிறார்கள். இதெல்லாம் கடல் பற்றி வெளியில் உலவும் செய்திகள். ஆனால் மணிரத்னம் கதை பற்றியோ நடிப்பவர்க்ள பற்றியோ வெளியில் சொல்லாமல் பரம ரகசியமாக வைத்திருக்கிறார். அவ்வளவு ஏன் ஹீரோ, ஹீரோயின் முகத்தைக்கூட காட்டாமல் ரகசியம் காக்கிறார். இப்போது படத்தின் முதல் பார்வை என்ற பெயரில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார் அதில்கூட ஹீரோ கவுதமின் முகம் தெரியவில்லை.
அப்படியென்ன ஆழ்கடல் ரகசியமோ....!!