ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படம் கடல். இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவும், கார்த்திக்கும் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் அவர்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் அய்யர் வீட்டு பையனாகவும், ராதா கிறிஸ்தவ பெண்ணாகவும் நடித்தார். இதில் கவுதம் கிறிஸ்தவ பையனாகவும், துளசி அய்யர் வீட்டு பெண்ணாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் கடற்புரம்தான் கதைக் களம். இதிலும் கடற்புரந்தான் கதை களம். ஆனால் அது கரையில் நடந்த கதை. இது கடலில் நடக்கும் கதை. நடுக்கடலில் ஒரு கிறிஸ்தவ பையனும், அய்யர் வீட்டு பெண்ணும் கிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் ஊரில் இரு ஜாதியினரும் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கரைக்குச் சென்றால் அந்த ஊர் இருவரையுமே கருணை கொலை செய்து விடும். நடுக்கடலில் தவிக்கும் அவர்களுக்குள் காதலும் வந்து விடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் நாயகனும், நாயகியும் தங்கள் மத அடையாளங்களை கழற்றி எறிவது மாதிரியான கிளைமாக்ஸ். இதில் அதற்கு நேர் எதிர்மாறான கிளைமாக்ஸ் என்கிறார்கள். இதெல்லாம் கடல் பற்றி வெளியில் உலவும் செய்திகள். ஆனால் மணிரத்னம் கதை பற்றியோ நடிப்பவர்க்ள பற்றியோ வெளியில் சொல்லாமல் பரம ரகசியமாக வைத்திருக்கிறார். அவ்வளவு ஏன் ஹீரோ, ஹீரோயின் முகத்தைக்கூட காட்டாமல் ரகசியம் காக்கிறார். இப்போது படத்தின் முதல் பார்வை என்ற பெயரில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார் அதில்கூட ஹீரோ கவுதமின் முகம் தெரியவில்லை.
அப்படியென்ன ஆழ்கடல் ரகசியமோ....!!