ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் வசந்தபாலன் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் நெருங்கிய நண்பர். வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படம் இன்னும் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் அவர் தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஜீ.பி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
கதைப்படி இந்த படத்தின் நாயகி ஒரு பண்பலை வானொலியில் தொகுப்பாளராக இருக்கிறவர். அதோடு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் தீவிர ரசிகர். அதனால் ஒரு காதல் காட்சியில் ஹீரோ அர்ஜூன் தாஸ், தன் காதலியை இம்பரஸ் செய்ய நா.முத்துகுமாரின் கவிதை வரிகளை பாடலாக்கி பாட வேண்டும். இது பாடலுக்கான சூழ்நிலை.
இதற்கு நா.முத்துகுமாரின் ஒரு கவிதையை அப்படியே பாடலாக்க முதலில் திட்டமிடடிருந்தார்கள். இப்போது அதையே போட்டியாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது நா.முத்துகுமாரின் சிறந்த கவிதை வரிகளை தேர்வு செய்து, அதில் சின்ன சின்ன மாறுதல்கள் செய்து ஒரு பாடலாக உருவாக்க வேண்டும்.
இதில் சிறப்பாக தொகுக்கப்பட்ட பாடலுக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் கவுரவமும், சிறப்பும், சன்மானமும் வழங்கப்படும் என்று வசந்தபாலன் அறிவித்துள்ளார். பாடல் வருகிற 30ந் தேதிக்குள் கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.