வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் டைகர் ஷெராப், திஷா பதானி. இருவரும் காதலர்கள் என்கிறது பாலிவுட் வட்டாரம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 15ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம். 2 மணிக்கு மேல் எந்தக் காரணமும் இல்லாமல் வெளியில் வரக் கூடாது.
ஆனால், காதல் ஜோடிகளான டைகர், திஷா இருவரும் மும்பையில் 2 மணிக்கு மேல் ஊர் சுற்றியிருக்கிறார்கள். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது சரியான காரணத்தைக் கூறவில்லையாம். அதனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து எப்ஐஆர் போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு விவேகம் படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மாஸ்க் போடாமல் வெளியில் வந்த போது அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.