ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மோசகமாத்தான் உள்ளது. அங்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
சீனியர் நடிகரான சிரஞ்சீவி அவரது சொந்த செலவில் சிரஞ்சீவி ஆக்சிஜன் வங்கி என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். முதல் கட்டமாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சன்ட்ரேட்டர்கள் ஆகியவற்றை அனந்தப்பூர், குண்டூர் மாவட்டங்களுக்கு அளித்திருக்கிறார். அடுத்து கம்மம், கரீம்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை வழங்க உள்ளார். சரியான நேரத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த ஆக்சிஜன் சேவைக்கு தெலுங்குத் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மட்டும் சில நடிகர்கள் லட்சங்களை வழங்கினார்கள். அதற்கும் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் எதையும் வழங்கவில்லை. மற்றபடி வேறு எந்த நிவாரண உதவிகளையும் எந்த சீனியர் நடிகர்களும் செய்யாமல் இருப்பது அவர்களது ரசிகர்களிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.