ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆயிரம் படங்களை கடந்து விட்ட இளையராஜாவுக்கு பல்வேறு அமைப்புகள் விருது வழங்கி கவுரவிக்க விரும்புகின்றன. ஆனால் அதனை இளையராஜா மறுத்து வருகிறார். துபாயில் வழங்க இருந்த "பெஸ்ட் காண்ட்ரிபியூசன் ஆப் வோர்ல்ட் மியூசிக்" என்ற விருதையும், மலேசியாவில் வழங்கப்படுவதாக இருந்த "லைப் டைம் அச்சீவ்மெண்ட்" விருதையும் மறுத்திருக்கிறார். முதன் முதலில் தேசிய விருது வழங்கப்பட்டபோது அதையும் வாங்க மறுத்தும், கடந்த ஆண்டு லிம்கா சாதனையாளர் விருதை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. விருதுகளின் மேல் இளையராஜாவுக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை.
தேசிய விருது குறித்த தனது கருத்தை இளையராஜா இப்போது வெளியிட்டிருக்கிறார். அது வருமாறு: சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டவரின் படம்தானே சிறந்த படமாகவும் இருக்க முடியும். பிறகு எப்படி சிறந்த படம் என்று ஒரு படத்துக்கும், சிறந்த இயக்குனர் என்று வேறுபடம் இயக்கியவருக்கும் கொடுக்கிறார்கள். சிறந்த இசை அமைப்பளார் என்று ஒருவருக்கும், சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் என்று ஒருவருக்கும் கொடுக்கிறார்கள். சிறந்த பின்னணி இசை கொடுப்பவருக்கு சிறந்த பாடலை கொடுக்க முடியாதா, சிறந்த பாடலை கொடுப்பவருக்கு சிறந்த பின்னணி இசையை கொடுக்க முடியாதா? இதனால் தேசிய விருதுகள் மீது என்கு பெரிய மதிப்பில்லை. இவ்வாறு இளையராஜா கருத்து தெரிவித்திருக்கிறார்.
ராஜா சொல்லி வச்சா... அது ராங்கா போறதில்லே...!!