மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் "தில்லு முல்லு"வின் படப்பிடிப்புகள் துபாயில் நடக்க இருக்கிறது. ரஜினி நடித்த தில்லு முல்லுவின் ரீமேக்கை பத்ரி இயக்குகிறார். சிவா, இஷா தல்வார், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் இதுவரை சென்னை ஐதரபாத்தில் நடந்து வந்தது. அடுத்த கட்ட துபாயில் நடந்து வருகிறது. "75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாடல்காட்சிகள் எடுக்க வேண்டியது உள்ளது. அதற்காகத்தான் துபாய் செல்கிறோம். வாலி எழுதிய "செக்கச் சிவந்த செர்ரி பழத்தில் லிக்கர் விழுந்ததா..." என்ற பாடலையும், ஒரிஜினல் தில்லுமுல்லுவில் இடம்பெற்ற "ராகங்கள் பதினாரும் உருவான வரலாறு..." பாடலையும் துபாயில் படமாக்கப்போகிறோம்" என்றார் இயக்குனர் பத்ரி. சிவா தன் புது மனைவியை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்
தயாரிப்பாளர் செலவில் ஹனிமூன் கொண்டாடுங்க சிவா.... கொண்டாடுங்க...