மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
திருமணம் என்பது வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல, என்று நடிகை ராணிமுகர்ஜி கூறியுள்ளார். இந்திய சினிமாவின் வித்தியாசமான நட்சத்திரம் என்ற பெயரை பெற்றவர் நடிகை ராணி முகர்ஜி. வழக்கமான சினிமா ஹீரோயின்கள் போல விருந்துகளில் அதிகமாக அவரைப் பார்க்க முடியாது. தேவையில்லாமல் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஆனாலும், பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுபவர். ஏறத்தாழ 50 படங்களில் நடித்துவிட்டார். அதில் பாதிக்கு மேற்பட்ட படங்கள் வெற்றிப் படங்கள் அல்லது பாராட்டையும் விருதுகளையும் அள்ளிக் குவித்த படங்கள்.
திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னுடைய திருமணம் பலருக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. ஆள் ஆளுக்கு இஷ்டத்திற்குக் கதை கட்டுகிறார்கள். என்ன செய்வது, சினிமா போன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டால் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதவும் பேசவும் மற்றவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. இது தவிர்க்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல. மிகவும் கவனமாகவும் தீர யோசித்தும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. உலகத்திற்கு வரும் எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாகத்தான் வருவதாகச் சொல்வார்கள். எனக்காக எங்கேயோ ஒருவர் இல்லாமலா இருப்பார்? அவர் வரும்வரை நான் தனிமையை ரசிக்கிறேன். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட நான் தயாராக இல்லை, என்று கூறியிருக்கிறார்.