ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, திமுக., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை பிரியா பவானி சங்கர் டுவிட்டரில், ‛‛நீண்ட காலத்துக்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்'' என பதிவிட்டார்.
இதற்கு ஒருவர், ‛‛சகோதரி முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்'' என பதிவிட்டார். அவருக்கு, ‛‛மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து இங்கி பிங்கி போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6வது வகுப்பில் நானும் குடிமக்கள் பற்றி நிறைய படிச்சிருக்கேன். மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை'' என பதிவிட்டார்.
மற்றொருவர் இவர் பதில் கொடுத்ததற்கு, ‛‛மேடம் இன்னும் 5 வருஷத்துல ரெட் ஜெயன்ட் மூவிஸ்,கிளவுட் நயன் மூவிஸ் உள்ளிட்ட இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க'' என பதிவிட்டார். அதற்கு பிரியா, ‛‛ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி டுவீட் போட்டுகிட்டு இருக்கேன்'' என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவருக்கு எதிராக பலர் கருத்து தெரிவிக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரியா.