ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ராஜமவுலியின் கடந்த கால படங்களை எடுத்துக் கொண்டால், மகதீரா வெளியானபோது அதுபற்றியே பிரமிப்பாக பேசியவர்கள், ஒரு ஈயை வைத்து அவர் ஈகா என்கிற படத்தை எடுத்து மிரட்டியபோது, மகாதீரவை மறந்தே போனார்கள். அதேபோலத்தான் பாகுபலி படங்களின் இரண்டு பாகங்கள் வெளியானபோது மகதீரா, ஈயை பற்றி மறந்துவிட்டார்கள்.. இப்போது வரை ராஜமவுலி என்றால் பாகுபலி பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டிஆர் இருவரையும் இணைத்து ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் இந்தப்படம் அக்-13ல் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார் லண்டன் தணிக்கை குழுவின் உறுப்பினராக உள்ள உமைர் சந்து என்பவர். படத்தின் சில காட்சிகளின் ரஷ் பார்த்ததாகவும், இந்தப்படம் வெளியானால் மக்கள் அனைவரிடமும் பாகுபலி படத்தையே மறக்கடித்து விடும் அளவுக்கு மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரமிப்புடன் கூறியுள்ளார் உமைர் சந்து.