ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலா இயக்கத்தில் திரைக்கு வரத்தயாராகி வரும் படம் பரதேசி. இந்த படத்துக்காக அதர்வா, வேதிகா, தன்சிகா அடங்கிய குழு சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக காடு மலைப்பகுதிகளில் முகாமிட்டு நடித்துக்கொடுத்து விட்டு திரும்பியுள்ளனர். ஆக இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடித்துக்கொண்டிருக்கிறார் பாலா. இதையடுத்து படத்தின் ஆடியோ விழாவை நடத்தவும் தயாராகி விட்டார்.
ஆனால் அப்படி விழாவுக்கு தயாராகி வருபவர், படத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளரின் பெயரை ஆடியோ அழைப்பிதழில் போடாமல் விட்டு விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஒளிப்பதிவாளர் செழியன், பரதேசிக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. நீங்கள்கூட இந்த மாதிரி காட்சி வர வேண்டும் என்று சொல்லிவிட்டு சேரில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டீர்கள். ஆனால் நானல்லவா, கல்லிலும் முள்ளிலும் நுழைந்து படமாக்கினேன். அதற்காக நான் பட்ட காயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அப்படிப்பட்ட என்னை கடைசி நேரததில் மறப்பது நியாயமா? என்று பாலாவிடம் ஆத்திரத்தில் வார்த்தைகளை அடுக்கடுக்காக கொட்டியிருக்கிறார். அதன்பிறகுதான் சாரி, எப்படியோ மறந்துட்டேன். பேரை சேர்த்துட்டா போச்சு என்று சொன்னாராம்.
என்றாலும், படப்பிடிப்பில் பட்ட காயங்களை விட, இவர் என் பேரை மறந்தது, மனசுக்குள்ள ரொம்ப பெரிய காயமாயிடுச்சுங்க -என்று சொல்லி புலம்புத்தள்ளி வருகிறார் ஒளிப்பதிவாளர்.