ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அம்சங்களில் ஒன்று அதன் ஒளிப்பதிவு. அதைச் செய்திருப்பவர் சந்தோஷ் சிவன். தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் துப்பாக்கியை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்திப் படத்துக்கும் சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கு சந்தோஷ் சிவன் மறுத்துவிட்டார். அக்ஷய்குமார் கேட்டும் முடியாது என்று சொல்லிவிட்டார். இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியதாவது: "கமர்ஷியல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது புதிதல்ல. தளபதி படத்துக்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். துப்பாக்கியில் சொல்லப்படும் மெசேஜ் பிடித்திருந்ததால் பணியாற்றினேன். ஒரே வேலையை திரும்ப செய்வது மாதிரி போரடிக்கிற விஷயம் எதுவும் கிடையாது. அதனால் துப்பாக்கியின் இந்தி ரீமேக்கில் பணியாற்றவில்லை. 2013ம் ஆண்டு ஒளிப்பதிவிலிருந்து விலகி இருக்கப்போகிறேன். இந்த வருடம் முழுவதும் ஒரு ஸ்கிரிப்பட் தயார் செய்து 2014ல் பிரமாண்ட படம் ஒன்றை இயக்கப்போகிறேன்" என்றார்.