ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காக்க முட்டை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை சில புள்ளிகள் வித்தியாசத்தில் தவறவிட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்து கனா படத்திற்கு கிடைக்கும் என்றார்கள். அதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்த நிலையில் சென்னையில் நடந்து வந்த 18வது சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. க.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது: உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெரு நன்றியும். என்றார்