அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். வழக்கு நடந்து வருகிறது. இவருடன் கைது செய்யப்பட்ட ராகிணி திரிவேதியும் தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டபோது அவர் வீட்டில் கிடைத்த சில போட்டோக்களின் அடிப்படையில் அவருக்கு அஜீஸ் பாஷா என்பவருடன் திருமண நிச்சயதார்ததம் நடந்துள்ளதும், அவர் முஸ்லிமாக மதம் மாறிய தகவல்களும் வெளிவந்தது. அப்போது அதனை சஞ்சனாவும், அவரது தாயாரும் கடுமையாக மறுத்தனர். அது சினிமாவுக்காக எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்று தெரிவித்தனர்.
விடுதலைக்கு பிறகு முதன் முறையாக சஞ்சனா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததையும், மதம் மாறியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
இனி மறைப்பதற்கு ஏதுமில்லை. எனது திருமண நிச்சயதார்த்தம் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்தபோது நடந்தது. அந்தக் காலகட்டத்தில் அதை கொண்டாடவோ, அதை தெரிவிக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமணத்தை ஒரு தொண்டு நிறுவனத்தில் எளிமையாக நடத்த இருக்கிறேன். நான் இப்போது ஆன்மிகத்தில் கவனம் செலுத்துகிறேன். தினமும் ஐந்து வேளை நமாஸ் செய்கிறேன். அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறேன். நான் இஸ்லாம் மதத்துக்கு மாறியது என் தனிப்பட்ட விருப்பம். என் முடிவை அரசியலாக்கவோ, விமர்சிக்கவோ வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.