ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னை : ‛‛மழை கொட்டும் நேரத்தில் கொட்டும் அது எப்படி கொட்டும் என சொல்லமுடியுமா? அப்படித்தான் பாடலும் அந்தந்த சமயத்திற்கு ஏற்றபடி பாடல் உருவாகும். அதை கேட்பதே உங்கள் தலையெழுத்து, என இளையராஜா கூறினார்
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டூடியோ ஒன்றை திறந்தார். முதல் பாடலாக வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு ஒலிப்பதிவு செய்தார். வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின் இளையராஜா அளித்த பேட்டி: பன்மொழிப்படங்கள் தயாராகும் சென்னையில் இருந்தத ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக விஜயா வாஹினி இருந்தது. அந்த ஸ்டூடியோ இன்று இல்லை. ஜெமினி, சாரதா, கோல்டன், ஏ.வி.எம்., ஸ்டூடியோ, விஜயா கார்டன் என பல ஸ்டூடியோக்கள் இன்று இல்லை. இந்த வரிசையில் பிரசாத் ஸ்டூடியோவும் சேர வேண்டும் என வெளியே வந்துவிட்டேன். என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி, ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளேன். இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளது. அதன் பின் பாடல் ஒலிப்பதிவு முழுவீச்சில் தொடர்ந்து நடக்கும்.
கடந்து வந்த வாழ்க்கைக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. அது இப்படித் தான் கொட்டும் என சொல்ல முடியுமா? எந்தச் சமயத்தில் இசை எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அதுதான் அவர்களின் தலையெழுத்து; மாற்ற முடியாது.
இன்றைய காலத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவமில்லை. பாடல்தான் முக்கியத்துவத்தை எடுக்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல்கள் ரசிகர்களைப் பிடித்து இழுக்க வேண்டும்.
இவ்வாறு, இளையராஜா கூறினார்.