மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழில் விஜய், ஜெயம் ரவி என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போல், தெலுங்கிலும் அல்லு அர்ஜுன், ராம் சரண் என்று, அங்குள்ள பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார், அமலா பால். ஆனால், அந்த படங்களில் நடிக்கும் மற்ற நடிகைகளுக்கும், அமலா பாலுக்குமிடையே தொழில்முறை போட்டி ஏற்பட்டிருப்பதாக செய்தி பரவியுள்ளது. அதுகுறித்து அமலாவைக் கேட்டால்,"நான் நடிக்கும் படங்களில் எத்தனை ஹீரோயின் இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. என் கேரக்டர் பிடிக்கிற பட்சத்தில், அந்த படங்களை ஏற்று நடிப்பேன். மற்றபடி, உடன் நடிக்கும் நடிகைகளை, நான் போட்டி மனநிலையுடன் பார்ப்பதே இல்லை.என் வேலை உண்டு, நான் உண்டு என்று இருப்பேன். மற்றவர்களைப்பற்றி யோசித்து, நேரத்தை வீணடிக்காமல், என்னைப்பற்றியும், என் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நான் யோசிப்பதுண்டு என்கிறார் அமலா பால்.