ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சோனாவிற்கும், பிரேம்ஜிக்கும் காதல் என்று செய்தி கசியும் நேரத்தில் இருவரும் "ஒன்பதுல குரு" என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இதுபற்றி பிரேம்ஜி கூறியதாவது: சோனா நான் நடித்த படத்தின் தயாரிப்பாளர். நல்ல தோழி அதற்கு மேல் எதுவும் இல்லை. மற்றவை எல்லாம் மீடியாக்களின் கற்பனை. அவரும் நானும் வெளிப்படையாக பழகினோம், ஒன்றாக ஓட்டலுக்கு போய் சாப்பிட்டோம், டென்னிஸ் விளையாடினோம், இதெல்லாம் தப்பா என்ன?. இப்போது நானும் அவரும் ஒன்பதுல குரு படத்தில் நடித்து வருகிறோம். கடலில் படப்பிடிப்பு நடந்தபோது திடீரென ராட்சத அலைவந்து இழுத்துச் செல்லப்பட்டோம். படப்பிடிப்பு குழுவினர் காப்பாற்றினர். நல்ல வேளை நான்தான் சோனாவை கடலுக்குள் தள்ளி விட்டேன் என்று சொல்லாமல் போனார்களே. அதுவரைக்கும் சந்தோஷம். தொடர்ந்து அண்ணன் படத்தில்தான் நடிக்கிறேன். காரணம் மற்றவர்கள் யாரும் கூப்பிடுவதில்லை. இப்போதுதான் ஒன்றிரண்டு பேர் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதை கெடுத்து விடாமல் இருந்தால் சரி. அண்ணன் தன் படத்தில் எனக்கு முக்கியத்துவம் தருவதாக சொல்கிறார்கள். ஏங்க இது என்னங்க நியாயம் அண்ணன் தம்பிக்கு செய்யாம வேற யாருக்குங்க செய்வான். என்னை மட்டும் நம்பி முழு ஹீரோவா போட்டு ஒரு படம் பண்ணுன்னு அவனுக்கு டார்ச்சர் கொடுத்துகிட்டு இருக்கேன். வேணா பாருங்க அதுவும் ஒரு நாள் நடக்கும். நீங்க பார்த்துதான் ஆகணும் அது உங்க தலையெழுத்து எப்பூடி? என்கிறார் பிரேம்ஜி.