ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகர்களில் தனது நடிப்பால் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. தன்னுடைய 43வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். பலருடைய வாழ்த்துகளுக்கு தன்னுடைய நன்றியைப் பகிர்ந்தார் விஜய் சேதுபதி.
டுவிட்டரில் சில ரசிகர்களின் பதிவுகளையும் ரிடுவீட் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் டிசம்பர் 23, 2010 அன்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேஸ்புக்கில் இட்ட பதிவை ஒரு ரசிகர் நேற்று டுவீட் செய்ததைத்தான் விஜய் சேதுபதி ரிடுவீட் செய்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் அந்த பேஸ்புக் பதிவில், “தென்மேற்கு பருவக்காற்று' நாளை வெளியாகிறது. விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் காத்திருக்கிறேன், வாழ்த்துகள் விஜய், திரையில் கலக்கவும்” என பதிவிட்டிருக்கிறார். அதற்கு ஒருவர், “யார் விஜய் சேதுபதி ?,” கமெண்ட் பதிவிட, பதிலுக்கு கார்த்திக் சுப்பராஜ், “அவரை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்” என பதிலளித்துள்ளார்.
'தென்மேற்கு பருவக்காற்று' படம் வெளியாவதற்கு முன்தினமே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்பதை கார்த்திக் சுப்பராஜ் கணித்திருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான 'பீட்சா' படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதிதான். அப்படம் இருவருக்குமே பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் இருவரும் “இறைவி, பேட்ட” ஆகிய படங்களிலும்
இணைந்துள்ளனர். இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு குறும்படங்களில் இணைந்து பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய் சேதுபதி மட்டுமல்ல, கார்த்திக் சுப்பராஜும் இன்றைய ரசிகர்களின் மனதில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.