பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை நாட்களில் 100 கோடி வசூலைக் கடக்கிறது என்பதுதான் அவர்களின் படங்கள் வெளியாகும் போது இருக்கும் முக்கிய பேச்சாக இருக்கும்.
விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளிவந்து மூன்று நாட்களாகிவிட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 100 கோடி வசூலைப் படம் தொட்டுவிட்டதாக டுவிட்டரில் பகிர ஆரம்பித்துவிட்டார்கள்.
கொரோனா தொற்று பாதிப்பால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. அதிலேயே மாஸ்டர் இந்த மகத்தான சாதனையைப் புரிந்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் 55 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 10 கோடி, கேரளாவில் 5 கோடி, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசூல் என 30 கோடி, ஆக மொத்தம் 100 கோடி வசூல் என ஒரு கணக்கு சொல்கிறார்கள்.
முதல் நாள் வசூல் 25 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அப்படியே இந்த 3 நாளில் 100 கோடி வசூல் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால் விஜய் ரசிகர்கள் கூடுதலாகக் கொண்டாடுவார்கள்.