ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆண்களை, "டிஷ்யூ பேப்பர் என்று கூறிய, நடிகை சோனாவை கண்டித்து, வரும், 19ம் தேதி, போராட்டம் நடத்த உள்ளதாக, தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது.பூவெல்லாம் உன் வாசம், மிருகம், குரு, குசேலன் உள்ளிட்ட, சினிமா படங்களில் நடித்துள்ளவர், நடிகை சோனா. இவர் சமீபத்தில், வாரப்பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில்,"" ஆண்கள், "டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள். திருமணம் என்பது முட்டாள் தனமானது; ஆண்களோடு சேர்ந்து வாழ்வது என்பது, அதை விட முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சோனாவைக் கண்டித்து, தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாரப் பத்திரிகையில், ஒன்றிற்கு கவர்ச்சி நடிகை சோனா அளித்த பேட்டியில், ஆண்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாக, கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக, கடைபிடிக்கும் திருமண முறையையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவுப்படுத்தும் வகையில், அவரது கருத்து அமைந்துள்ளது. அவர், தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்று, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில், உலக ஆண்கள் தினமான, இம்மாதம், 19ம் தேதி, தமிழ் மக்களை ஒன்று திரட்டி, சோனாவின் வீடு முற்றுகையிடுவோம். நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சோனாவை நீக்கவும், கோரிக்கை விடுப்போம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.