மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
யுடிவி தயாரிக்கும் சேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகாவும், அஞ்சலியும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் தொடங்கி மேக்-அப் சாதனங்கள் வரை இருவருக்கும் போட்டியும், அதன் காரணமாக மனஸ்தாபமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் கண்ணன் அளித்த விளக்கம்.
படத்திற்கு இருவரையும் ஒப்பந்தம் செய்யும்போது யாருக்கு என்ன கேரக்டர் என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டுதான் படத்தையே தொடங்கினோம். இதுவரை நடந்த படப்பிடிப்பில் ஹன்சிகா தனியாகவும், அஞ்சலி தனியாகவும் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை இனிமேல்தான் எடுக்க இருக்கிறோம். அதற்குள் இப்படிப்பட்ட செய்திகளை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாகவும். அஞ்சலியை முத்தக் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்ததாகவும் புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இந்தி டெல்லி பெல்லியில் கொஞ்சம் வல்கரான வசனங்கள் இருந்தது. ஆனால் நாங்கள் அதனை தவிர்த்திருக்கிறோம். ஒரே ஒரு முத்தக் காட்சி படத்தில் இருக்கிறது. ஆரம்பத்தில் அஞ்சலி நடிக்க தயங்கினார். அவரது அம்மா என் மகள் அப்படி நடிக்க மாட்டாள் என்றார். ஆனால் கதையின் முக்கியத்துவத்துக்கு அந்த காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொன்ன பிறகு ஒத்துக் கொண்டு நடித்தார்.
சேட்டை படத்துக்கிட்டேயே சேட்டைய காட்டுறாய்ங்களே....