விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
வாகை சூடவா, மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி படங்களில் நடித்துள்ள இனியா, முற்றிலும் குடும்பப்பாங்கான நடிகை, அவர் நவீன சினிமாவுக்கு செட்டாக மாட்டார் என்றொரு கருத்து நிலவுகிறது. அதோடு, கிளாமர் கலந்த கதைகளை அவர் தவிர்த்து வருவதாககூட செய்தி பரவியுள்ளது. ஆனால் இதுபற்றி இனியாவைக்கேட்டால், கவர்ச்சிகரமாக நடிப்பதற்கு ஒருபோதும் நான் மறுப்பு சொன்னதில்லை. நான் நடித்த படங்களைப்பார்த்து இவர் அந்த மாதிரி கதைகளில் நடிக்க மாட்டார் என்று சினிமாத்துறையினரே முடிவு செய்து விட்டனர் என்கிறார்.
மேலும், ஒரு நடிகை என்கிறபோது ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தேவையான பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதை சரியான செய்ய நான் தயாராக இருக்கிறேன். கிளாமர் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும்கூட என்கிறார் இனியா. அதேசமயம், கிளாமரிலும் ஒரு லிமிட் வைத்திருப்பேன். அளவுக்கதிகமாக ஆபாசமாக நடிப்பது, படம் பார்ப்பவர்களை அருவருப்படைய செய்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எதையும் ரசிக்கும் அளவுக்குத்தான் வெளிப்படுத்துவேன். அதனால் கிளாமர் கதைகளுடனும் இயக்குனர்கள் என்னை தாராளமாக அணுகலாம் என்கிறார் இனியா.