ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்கள் பிரச்னைகளை சொல்லும் படமாக நினைவுகள் அழிவதில்லை படம் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா எழுதி பரபரப்பை ஏற்படுத்திய திரேஸ் மரண என்ற நாவலை, பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவுகள் அழிவதில்லை என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்தார். இந்த நாவல்தான் இப்போது அதே பெயரில் திரைப்படமாகி வருகிறது. இதில் புதுமுகங்கள் குகன், அருண், சிவா, சண்முகம் ஆகிய 4 பேரும் கதாநாயகர்களாக நடிக்க, காயத்ரி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஓம் முத்துமாரி, மஞ்சுளா ஆகிய 2 நாடக கலைஞர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டைரக்டர் பகத்சிங் கண்ணன். தனது படம் குறித்து பகத்சிங் கண்ணன் கூறுகையில், 1943-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துணையுடன் நில பிரபுக்கள், ஏழைகளுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்கிறார்கள். அதை எதிர்த்து ஒரு கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் மக்களை திரட்டி போராடுகிறார்கள். அந்த நான்கு இளைஞர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கு தண்டனை விதிக்கிறது. அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதா, இல்லையா? என்பதே கதை. `புதுயுகம் நடராஜன் ஒளிப்பதிவு செய்ய, பி.ஆர்.ரஜின் இசையமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு சென்னை, தஞ்சை, பல்லடம், ஊட்டி, திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. மக்கள் பிரச்னையை மையக்கருவாக கொண்ட படம் என்பதால், எடிட்டர் பி.லெனின் சம்பளமே வாங்காமல், இந்த படத்தில் பணிபுரிந்து இருக்கிறார்.