ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மைனா படத்துக்குப்பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்ச நடிகையாகி விட வேண்டும் என்று அமலாபால் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அவருக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தது. அப்படத்தில் முக்கிய நாயகி அனுஷ்கா என்றபோதும், முன்னணி ஹீரோ படத்தில் இடம் பிடித்தால்போதுமென்று கமிட்டானார் அமலாபால். அப்படி நடித்தபோதுதான் படநாயகனான சீயான் நடிகருடன் நட்பு ஏற்பட்டது. அதையடுத்து தனது படங்களில் சிபாரிசு செய்வதாக நடிகர் வாக்குறுதி அளித்ததன் காரணமாக அவரது பாசறைக்குள் தானாகவே சிக்கிக்கொண்டார் நடிகை.
ஆனால் அடுத்தடுத்து மேற்படி நடிகர் நடித்த எந்த படத்திலும் அமலாவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கொதித்துப்போன நடிகை, வாய்ப்புத்தேடி ஆந்திர கரையோரம் ஒதுங்கினார். அங்கே அவரை அரவணைக்க மேல்தட்டு ஹீரோக்கள் பலர் ஆவலுடன் எதிர்நோககியிருந்தனர். இதனால் போன வேகத்தில் கிடைத்த படங்களை கைப்பற்றிக்கொண்ட நடிகை, அங்குள்ள நடிகர்களின் பாசறை நாயகியாகிவிட்டார். அதன்காரணமாக, சீயான் நடிகரின் பிடியிலிருந்து சிறுக சிறுக தன்னை விடுவித்துக்கொண்டு நழுவி விட்டார் அம்மணி. இப்போது நடிகரின் பெயரை யாரவது உச்சரித்தாலே அம்மணியின் முகத்தில் அப்படியொரு கோபம் தாண்டவமாடுகிறதாம்.