ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
அனன்யாவைப் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், அவர் மலையாள சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மைடியர் குட்டிச் சாத்தான் படத்தின் ஒளிப்பதிவாளர் கே.பி.நம்பியாத்ரியும், கேரளாவில் பிறந்தாலும் ஹாலிவுட்டில் டிராகுலா படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ரூபேஷ் பாலும் இணைந்து தமிழ், மற்றும் மலையாளத்தில் ஒரு டிராகுலா திகில் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் ராட்ச்சசி என்றும், மலையாளத்தில் ரத்த ராட்ச்சசு என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் பேயாக நடிப்பவர் அனன்யா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் சுனில். அனன்யா குடும்பத்தோடு அடர்ந்த காட்டுக்குள் சுற்றுலா செல்கிறார். அங்கு ஒரு மர்ம பங்களாவில் அவர்கள் மழைக்காக ஒதுங்குகிறார்கள். அப்போது அங்குள்ள ஆவிகள் அவர்களை தாக்குகிறது. அனன்யாவின் குடும்பத்தினர் அனைவருமே டிராகுலாவாக மாறி ஒருவரை ஒருவர் கடித்து திண்ண அலைகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பயங்கர கதையை 3டியில் உருவாக்கி வருகிறார்கள்.