ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எந்திரன் படத்தில் அறிமுமாகி இரண்டு ஆண்டுக்குள் 150 பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து விட்டார் மதன் கார்க்கி. வைரமுத்துவின் வாரிசு. பல படங்களில் முழுப் பாடல்களையும் எழுதி வருகிறார். அவர் அளித்த பேட்டி: நான் சினிமாவுக்கு பாட்டு எழுத வருவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. வெளிநாட்டு படிப்பு, பெரிய உத்யோகம்தான் கனவாக இருந்தது. அப்பாவின் கவியரங்கங்களுக்குகூட ஆர்வமாக சென்றதில்லை இப்போது 180 பாடல்கள் வரை எழுதியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பாடல் எழுதுவதற்கென்று எந்த இடத்தையும் தேர்வு செய்வதில்லை. அப்பாவுக்கு பூங்கா, மொட்டை மாடிபோன்று எனக்கு காபி ஷாப்பில் அமர்ந்து பாட்டு எழுதுவது பிடிக்கும். மணிக்கணக்கில் காபி ஷாப்பில் உட்கார்ந்திருப்பேன். ஒரு பாடலை 5 நிமிடத்திலும் எழுதி இருகிறேன். 5நாட்களிலும் எழுதியிருக்கிறேன். எந்த படத்துக்கு பாட்டு எழுதினாலும் முழு கதையையும் கேட்க மாட்டேன். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் பாடல்களுக்கான சூழ்நிலையை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
படத்தின் கேரக்டருக்கேற்ப எழுதும் பாடல் வரிகளை தேவையில்லாத விஷயங்களுடன் முடிச்சு போட்டு அதனை நீக்க வலியுறுத்தும் போக்கு அதிகரித்திருப்பது வருத்தமாக இருக்கிறது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிறகு வரிகளை நீக்கி மீண்டும் ஒலிப்பதிவு செய்வது தயாரிப்பாளருக்கு சிரமத்தை கொடுக்கும் விஷயம். இருந்தாலும் நாங்களும் பொறுப்பை உணர்ந்துதான் எழுதுகிறோம்.