ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சொந்த மொழியான கன்னடத்தில் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் லட்சுமிராய். கர்நாடக மாநிலம் பெல்காமை சேர்ந்தவரான லட்சுமிராய் கற்க கசடற என்ற தமிழ் படத்தில்தான் அறிமுகமனார். அதற்பிறகு காஞ்சனா கேபிள் டி.வி. படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் லட்சுமிராய் கன்னடத்தில் 3 படங்களில்தான் நடித்தார். அந்த மூன்றுமே தோல்விப் படங்கள். இதனால் சொந்த மண்ணின் மக்களுக்கு என்னை ரசிக்கத்தெரியவில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லி கன்னட ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். ஒரு கல்லூரி விழாவுக்கு அவர் சென்றபோது அந்த கல்லூரி மாணவர்கள் அவரை கூச்சலிட்டு திருப்பி அனுப்பினார்கள்.
இப்போது கன்னடனத்தில் படங்கள் வர ஆரம்பித்ததும். மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். கன்னட ரசிகர்கள் கண்ணியமானவர்கள். தமிழ் ரசிகர்கள் வெறும் கவர்ச்சியைத்தான் ரசிக்கிறார்கள் என்றும், கன்னட ரசிகர்கள் ரசித்த மீதியைத்தான் மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்றும் சொல்ல கொதித்துப்போயிருக்கிறது கோடம்பாக்கம். அதனால்தான் தாண்டவம் படத்தின் புரமோசன்களுக்கு வராமல் தவிர்த்தார். இப்போது தான் அப்படி பேசவே இல்லை. கன்னட பத்திரிகையாளர்கள் நான் தமிழில் சொன்ன பதிலை தவறாக புரிந்து கொண்டு திரித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்று அந்தர் பல்டி அடித்துவிட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது "தமிழ் மக்கள்தான் என்னை நடிகையாக உயர்த்தினார்கள். அவர்கள்தான் என்னை அங்கீகரித்தார்கள். தமிழில் வாய்ப்பு இல்லாதபோது சின்ன சின்ன நடிகர்கள்கூட நான் நடித்தேன். தமிழை விட்டு வெளியே வராமல் அங்கேயே இருந்தேன். அவர்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. ரசிகர்களில் கன்னடம், தமிழ் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. என்னைப் பற்றிய சர்ச்சைகளை கிளப்பி விடுவது புதிதல்ல. முன்பு கிரிக்கெட் வீரர்களோடு இணைத்து சர்சையை கிளப்பினார்கள். என் சொந்த வாழ்க்கை பற்றி பேசினார்கள். அப்போதெல்லாம் நான் அதை பற்றி விளக்கவில்லை. காரணம் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டேன். இது உணர்வுபூர்வமான இரு மாநில மக்களின் பிரச்சினை என்பதால் எனது விளக்கத்தை கூறுகிறேன். என்கிறார்.
நெல்லை கொட்டினால் அள்ளிடலாம், சொல்லை கொட்டினால் அள்ள முடியாதுன்னு எங்க ஊர்ல பழமொழியெல்லாம் இருக்கு லட்சுமி மேடம்....