ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே.சி.ரவிதேவன். இவர் இயக்கி உள்ள படம் கள்ளத்துப்பாக்கி. தமிழ் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவந்திகா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.கே.பாலச்சந்திரன் இசை அமைத்துள்ளார். வேலை வெட்டி இல்லாமல் திரியும். 5 சிறுவர்களிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்தின் பெயரை பயன்படுத்த கூடாது. அதில் எங்கள் படத்தின் தலைப்பான துப்பாக்கி உள்ளது. என்று இயக்குனர் பிரச்னையை கிளப்பினார். இது தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக சமாதானத்தில் முடிந்தது. இருந்தாலும் கோபம் தீராத இயக்குனர். துப்பாக்கி வெளியாகும் தீபாவளி அன்றே தன் படத்தையும் வெளியிடுவது என்று விளம்பரங்கள் செய்து வந்தார். இந்த நிலையில் படத்துக்கு அடுத்த பிரச்னை வந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர். படம் வன்முறை நிறைந்ததாக இருக்கிறது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் கள்ளத்துப்பாக்கி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவிதேன் கூறியதாவது, கூலிக்காக கொலை செய்வதுதான் படத்தின் கதை களம். ஆட்டோ டிரைவர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர், செருப்பு தைப்பவர்களில் சிலர் கூலிக்காக கொலை செய்வர்கள் கொலை செய்யப்படுபவர் யார், யாருக்காக கொலை செய்கிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு கடமை போல செய்து விட்டு வருவார்கள். இதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறோம். இதுபோன்ற படங்கள் இந்தியில் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இதை அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இதற்கு பின்னால் யாருடைய சதியும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பத்திருக்கிறோம். அங்கும் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் வரை சென்றாவது படத்தை வெளியிட்டே தீருவோம் என்றார்.
கள்ளத்துப்பாக்கி என்றாலும் சிக்கல் அப்படி பெயர் வைத்தாலுமா சிக்கல்....?!